கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு 'டிஜிட்டல் புரட்சியை' கண்டுள்ளது : அமித் ஷா
Jan 14, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு ‘டிஜிட்டல் புரட்சியை’ கண்டுள்ளது : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 11, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் ‘இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம்’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  ‘இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம் ‘ தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

இந்தியாவின்  டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால்  இயற்கையாகவே இணையவழிக் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது வழிவகுத்துள்ளதாகவும் கூறினார்.

‘மென்பொருள்’, ‘சேவைகள்’, ‘பயனர்கள்’ மூலம் இணைய மோசடிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்கும் வரை, இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவை இணைய –பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

இணைய குற்றங்கள் அனைத்து எல்லைகளையும் கடந்து  நடைபெறுவதாகவும், அதற்கு வரம்புகள் அல்லது நிலையான வடிவம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு ‘டிஜிட்டல் புரட்சியை’ கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று, நாட்டில் 95 சதவீத கிராமங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருஅவர் லட்சம் கிராம பஞ்சாயத்துகள் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதிகளுடன் உள்ளதாக  தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2024-ம் ஆண்டு யுபிஐ  வசதி  மூலம் ரூ.17.221 லட்சம் கோடி மதிப்பிலான 246 டிரில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2024-ம் ஆண்டில், சர்வதேச அளவில் டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகளில் 48 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2023-ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பு சுமார் ரூ.32 லட்சம் கோடியாக இருந்ததாகவும், இதன் மூலம் 15 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமித் ஷா வலியுறுத்தினார். இணையவழி நிதி மோசடியைக் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கும் உதவி தொலைபேசி எண் 1930 ஒற்றைச் சாளர தீர்வுகளை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர்  நித்யானந்த் ராய், குழுவின் உறுப்பினர்கள், மத்திய உள்துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags: Amith shaIndia has witnessed a 'digital revolution' in the last decade: Amit Shah
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்தவர் கைது!

Next Post

மதவாத அரசியலை முன்னேடுங்கள் : திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சர்ச்சை பேச்சு!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies