அமெரிக்காவில் ராஜ மரியாதை : நவீன மாளிகையில் மோடி தங்கவைக்கப்பட்டது ஏன்?
Jan 14, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவில் ராஜ மரியாதை : நவீன மாளிகையில் மோடி தங்கவைக்கப்பட்டது ஏன்?

Murugesan M by Murugesan M
Feb 13, 2025, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியமான தலைவர்கள் மட்டுமே தங்கும் பிளேர் மாளிகையில் மோடி தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறப்பு வரவேற்பு ஏன்? பிளேர் மாளிகையின் சிறப்புகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப், கடந்த ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்றார். ட்ரம்ப் பதவி ஏற்பு விழாவில், பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்ற ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், இந்தியாவுக்குத் தான் முதல் மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிபரான ஏழு நாட்களுக்குள் ட்ரம்ப், பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய உறவை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக, இருவருக்கும் இடையே நடந்த உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் இருவரும் கலந்து கொண்ட பிரத்யேக பொது நிகழ்ச்சிகளில் தெளிவாக தெரிய வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஹூஸ்டனில் நடைபெற்ற “ஹவுடி மோடி” நிகழ்ச்சி மற்றும் , 2020 ஆம் ஆண்டு ட்ரம்பின் அகமதாபாத் வருகையும் இந்த உறவுக்குச் சிறந்த சான்றாகும்.

வலிமையான தலைமை பண்புடைய அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும், தேசம் முதலில் என்ற கொள்கையால் தேசியவாத பொருளாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, அவர் தங்கும் பிளேர் மாளிகையில் அமெரிக்கக் கொடி அகற்றப் பட்டு, மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டது. ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் பிரதமரை வரவேற்க கூடியதால் பிளேர் மாளிகை உற்சாகத் திருவிழாவாக மாறியது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் “பாரத் மாதா கி ஜெய்” மற்றும் “மோடி, மோடி” என்ற உற்சாக கோஷங்கள் வாஷிங்டன் காற்றில் பலமாக எதிரொலித்தன.

வெள்ளை மாளிகைக்கு நேர் எதிரே, 1651 பென்சில்வேனியா அவென்யூவில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க வீடு சாதாரண விருந்தினர் மாளிகை அல்ல. இராஜதந்திர மகத்துவத்தின் சின்னமாகும்.

முன்னாள் இந்தியப் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி, இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் அதிபர் சார்லஸ் டி கோல், கோல்டா மெய்ர், ஷிமோன் பெரெஸ் மற்றும் யிட்சாக் ராபின் ஆகிய இஸ்ரேல் பிரதமர்கள் மற்றும் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த பிளேர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

பல்வேறு நாட்டு அதிபர்கள் , அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகத் தலைவர்களை வரவேற்றுள்ள , “உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல்” என்று புகழப்படுகிறது.

1824 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிளேர் மாளிகை, 1837ம் ஆண்டு பிளேர் குடும்பம் இங்கு குடியேறியபோது வாஷிங்டனின் ஒரு அரசியல் மையமாக மாறியது.

இது வெள்ளை மாளிகையின் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆடம்பரமான கட்டிடமாகும். வெள்ளை மாளிகையின் 7,000 சதுர அடி விரிவாக்கமான அமைந்துள்ள இந்த பிளேர் மாளிகை, ஐந்து நட்சத்திர வடிவமைப்புடன், ஆடம்பரமான தங்குமிடங்கள், பழங்கால அழகுப் பொருட்கள், நுண்கலை மற்றும் ஏராளமான வரலாற்று கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்க வரலாறு மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் பிளேர் மாளிகை வடிவமைக்கப் பட்டது. 4 விருந்தினர் படுக்கையறைகள், 35 குளியலறைகள், மூன்று வகையான சாப்பாட்டு அறைகள் மற்றும் ஒரு முழுமையான அழகு நிலையம் உட்பட 119 அறைகள் இந்த பிளேர் மாளிகையில் உள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் நெறிமுறைத் தலைவர் அலுவலகத்தால் இயக்கப்படும்
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிளேர் மாளிகையில் தங்குவதற்கு அமெரிக்க அதிபரின் அழைப்பு மிக முக்கியமான மரியாதையாகும். அது பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.

சீனாவை எதிர்கொள்வதில் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி கடை பிடிக்கும் ஒரே மாதிரியான அரசியல் கண்ணோட்டம், இருவருக்குமான உறவு மேலும் வலிமையாக வைத்துள்ளது. இது அமெரிக்க – இந்திய கூட்டுறவையும் பலப்படுத்தியுள்ளது.

மேலும், ட்ரம்ப் இந்தியாவை அடிக்கடி விமர்சித்தாலும் பிரதமர் மோடியை ஒருபோதும் விமர்சித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் பற்றிய பிரதமர் மோடியின் நிலைப்பாடு, ரஷ்ய அதிபர் புதினையோ, அல்லது ரஷ்யாவையோ விமர்சிக்காமல் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் நிலைப்பாட்டையே எதிரொலிக்கிறது.

இதனால் தான், பிரதமர் மோடி- அதிபர் ட்ரம்ப் சந்திப்புக்கு முன்னதாக, ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் உயர்ந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2 நாட்களில் 12 பில்லியன் டாலர்களை விற்றுள்ளது. இந்த டாலர் விற்பனை மூலம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வேகத்தில் வளர்ந்துவரும் சூழலில், இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ட்ரம்பை கையாள்வதே மிகப்பெரும் சவால். அந்த சவாலை சாதுரியமாக செய்து முடிப்பார் பிரதமர் மோடி என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tags: usapm modi newsdonald trump 2025Royal respect in Americapm modi visit america
ShareTweetSendShare
Previous Post

AI -க்கு உலகளாவிய கட்டுப்பாடு : அமெரிக்கா, இங்கிலாந்து ஒத்துழைக்க மறுப்பு!

Next Post

களையிழக்கும் வெள்ளி ஆபரணத் தொழில் : மாற்று தொழில்களை நோக்கி படையெடுக்கும் தொழிலாளர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies