களையிழக்கும் வெள்ளி ஆபரணத் தொழில் : மாற்று தொழில்களை நோக்கி படையெடுக்கும் தொழிலாளர்கள்!
Sep 20, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களையிழக்கும் வெள்ளி ஆபரணத் தொழில் : மாற்று தொழில்களை நோக்கி படையெடுக்கும் தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 06:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெள்ளியின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சேலத்தில் வெள்ளி ஆபரண தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

அண்மை காலத்தில் தங்கத்தின் தாறுமாறான விலை உயர்வு, தங்க நகைகள் வாங்க ஆசைப்படும் நடுத்தர வர்க்கத்தினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க வெள்ளி விலையும் மளமளவென உயர்ந்து வருவது, மக்களை மட்டுமல்லாமல் வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களையும் நிலைகுலைய செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ வெள்ளி பார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

இந்த விலை உயர்வு வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் தலையில் இடியாக இறங்கியுள்ள நிலையில், சேலத்தில் வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 40 சதவீத தொழிலாளர்கள் பிழைப்புக்காக மாற்று தொழிலுக்கு படையெடுத்துள்ளனர். மணியனூர், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், வாழப்பாடி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட புறநகரப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ள நிலையில், அதில் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வெள்ளி கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் கூட இயந்திரங்கள் மூலமே வெள்ளி கொலுசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் தொழிலாளர்களின் கைவண்ணத்தால் வெள்ளி கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே சேலத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகளுக்கு நாடு முழுவதும் மவுசு அதிகம்.

வழக்கமான நாட்களில் 50 முதல் 70 டன் வரையிலும், பண்டிகை காலங்களில் 100 முதல் 125 டன் வரையிலும் வெள்ளி கொலுசுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாவட்டங்கள் முதல் வெளி மாநிலங்கள் வரை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போது வெள்ளியின் இந்த தாறுமாறான விலை உயர்வு, வெள்ளி ஆபரண உற்பத்தியில் எதிரொலிப்பதால் வெள்ளி கொலுசு விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வியாபாரிகளிடம் இருந்து வரும் ஆர்டர்கள் குறைந்து வருவதால் ஏராளமான பட்டறை உரிமையாளர்கள் லாபம் பார்க்க முடியாமல் தங்கள் பட்டறைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேலத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கிட்டதட்ட 6 ஆயிரம் வெள்ளி பட்டறைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது வெறும் 4 ஆயிரம் பட்டறைகளிலேயே வெள்ளி கொலுசு தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் மூடப்பட்ட வெள்ளி பட்டறைகளில் பணியாற்றி வந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள், தங்கள் பிழைப்பிற்காக கார்மென்ட்ஸ் வேலை, கோழிப்பண்ணை வேலை, கட்டட வேலை என மாற்று தொழில் தேடி செல்ல தொடங்கிவிட்டனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் சேலத்தில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணி முற்றிலுமாக நின்றுவிடும் என வெள்ளி பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழிலை காக்கும் வகையிலும், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டும் தங்கத்திற்கு தர நிர்ணயம் செய்வதுபோல், வெள்ளிக்கும் தர நிர்ணயம் செய்ய வேண்டும், வெள்ளியை ஆபரண பட்டியலில் இருந்து நீக்கி வரிக்குறைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: tamil janam tvtamil nadu news todayWeeding Silver Jewelery Industry: Workers Invading Alternative Industries!களையிழக்கும் வெள்ளி ஆபரணம்
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் ராஜ மரியாதை : நவீன மாளிகையில் மோடி தங்கவைக்கப்பட்டது ஏன்?

Next Post

இந்தியாவும், அமெரிக்காவும் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்து செல்லும் – பிரதமர் மோடி உறுதி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies