முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் - நிர்கதியான குழந்தைகள்!
Jan 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் – நிர்கதியான குழந்தைகள்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனைவியை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்? கொலைக்கான காரணம் என்ன? பின்வரும் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள செங்குந்தபுரம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் – மணிமேகலா தம்பதியர். இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ள நிலையில், கோபால் வெல்டிங் மற்றும் ஐஸ் விற்கும் வேலைகளுக்கு சென்று வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபால் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால், அவருக்கும் மனைவி மணிமேகலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே கோபால் மணிமேகலாவின் செல்போனில், அவர் தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுபற்றி கேட்டு கோபால் சண்டையிட்ட நிலையில், மணிமேகலா சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இதனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி சித்தோடு காவல் நிலையத்தில் கோபால் முறையிட்டுள்ளார். அதனடிப்படையில் போலீசார் மணிமேகலாவை காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசாரிடமும் தனக்கு கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என மணிமேகலா கூற, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய கோபால் சென்னிமலை சாலையில் உள்ள ஐடிஐ அருகே தங்கி வந்துள்ளார். பின்னர் தனியாக இரு மகன்களையும் கவனித்துக்கொள்ள தொடங்கிய மணிமேகலா, சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள மிக்சர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மணிமேகலா பள்ளியில் தன்னுடன் படித்த, கறிவெட்டும் தொழிலாளியான மோகன்ராஜுடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிமேகலா மிக்சர் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கோபால், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிமேகலாவை சக தொழிலாளர்கள் மீட்டு சித்தோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே கோபால் சித்தோடு கிராம நிர்வாக அலுவலர் முன்பு கொலை செய்த கத்தியுடன் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சித்தோடு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சேர்ந்து வாழுமாறு பலமுறை எடுத்துக்கூறியும் கேட்காமல், ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், மணிமேகலாவை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து கோபாலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையும் சிறைக்கு சென்றதால், அவர்களின் விவரமறியாத இரு மகன்கள் நிர்க்கதியாக நிற்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: crime storytamil nadu news todayTn newsTragedy due to improper relationship: husband who killed his wife - orphaned children!special story
ShareTweetSendShare
Previous Post

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்?

Next Post

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies