மோடி MIGA - ட்ரம்ப் MAGA : வெற்றியை நோக்கி MEGA கூட்டணி!
Jul 26, 2025, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடி MIGA – ட்ரம்ப் MAGA : வெற்றியை நோக்கி MEGA கூட்டணி!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் அமெரிக்க இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள், உளவுத்துறை ஒத்துழைப்புகள், தொழில்நுட்ப அறிவு பரிமாற்றங்கள் குறித்து விவரித்தனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

47-வது அமெரிக்க அதிபராக பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள், அதிபர் ட்ரம்பை சந்தித்த நான்காவது அயல்நாட்டுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.

இதுவே ட்ரம்ப் நிர்வாகம் பிரதமர் மோடிக்கு தந்த மரியாதையையும், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு பிரத்யேக மரியாதையும் வரவேற்பும் வழங்கப்பட்டன.

முக்கிய சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே தங்க வைக்கப்படும் பிளேயர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதனை தொடர்ந்து, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தக உறவுகள், குடியேற்றம், இராணுவத் தளவாட விற்பனை, அணு தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கு அதிக அளவிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய உள்ளதாக கூறிய அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு F-35 ஸ்டெல்த் ரக போர் விமானங்களை வழங்குப் போவதாகவும் உறுதியளித்தார்.

இந்தியா- சீனா, இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ராணுவப் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அதிநவீன F-35 ஸ்டெல்த் ரக போர் விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்குவது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்பின் MAKE AMERICA GREAT AGAIN என்ற கொள்கையை சற்று மாற்றி, MAKE INDIA GREAT AGAIN என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி “MIGA மற்றும் MAGA இணைந்து வளமையான MEGA கூட்டாண்மையாக மாறியுள்ளன என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கூடுதலாக, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அதற்காக தன்னாட்சி அமைப்பு தொழில் கூட்டணியை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அடுத்த பத்தாண்டுகளுக்கு, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கட்டமைப்புக்களும் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளனர்.

உலக வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், முதலில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரை இயக்கப்படும் என்றும், பிறகு அமெரிக்கா வரை சாலைகள், ரயில்வே மற்றும் கடலுக்கடியில் கேபிள்களுடன் இணைக்கப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு QUAD உச்சிமாநாட்டை இந்தியா நடத்த இருக்கும் நிலையில், இந்திய -பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமான வளர்ச்சியைப் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, கடல்வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் சுமார் 60 மணிநேரம் மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதிக்கு 2012 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவனான தஹாவூர் ராணா, வேறொரு வழக்கில் தண்டனை பெற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து, ராணா சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ராணாவின் கோரிக்கை மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

இந்நிலையியல், ராணாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த, அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல் பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ராணாவுக்கு இந்தியாவில் தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tags: PM Modidonald trump 2025Modi MIGA - Trump MAGApm modi vist usa
ShareTweetSendShare
Previous Post

ரயில்வேயின் அசத்தல் திட்டம் : 2 மணி நேரத்தில் சென்னை- ஹைதராபாத் பயணம்!

Next Post

ஆட்குறைப்பு நடவடிக்கை : 10,000 பேரை வீட்டுக்கு அனுப்பி அமெரிக்க அதிபர் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies