உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி - பெற்றோர் போராட்டம்!
Aug 19, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி – பெற்றோர் போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உறுதியளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் தனியார் CBSE பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளை தேர்வு துவங்க உள்ள நிலையில், தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் கேட்டபோது, CBSE-க்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தனி தேர்வர்களாக தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மாவட்ட DEO, CEO அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போதுதான் பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கே அங்கீகாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி உள்ளதால், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் தவறாக வழி நடத்தியதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நாளை சிபிஎஸ்இ தேர்வு எழுத முடியாது என்பதால், மாநில பாடத்தில் அடுத்த மாதம் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடியும் எனவும் மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதாக பெற்றோர் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால், அதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags: District Collector.ThanjavurThanjavur: A proper investigation will be conducted on the school administration - District Collector Priyanka Pankajam assured!
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies