உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி - பெற்றோர் போராட்டம்!
Jun 13, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி – பெற்றோர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உறுதியளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் தனியார் CBSE பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளை தேர்வு துவங்க உள்ள நிலையில், தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் கேட்டபோது, CBSE-க்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தனி தேர்வர்களாக தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மாவட்ட DEO, CEO அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போதுதான் பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கே அங்கீகாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி உள்ளதால், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் தவறாக வழி நடத்தியதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நாளை சிபிஎஸ்இ தேர்வு எழுத முடியாது என்பதால், மாநில பாடத்தில் அடுத்த மாதம் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடியும் எனவும் மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதாக பெற்றோர் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால், அதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags: District Collector.ThanjavurThanjavur: A proper investigation will be conducted on the school administration - District Collector Priyanka Pankajam assured!
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies