உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி - பெற்றோர் போராட்டம்!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி – பெற்றோர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உறுதியளித்துள்ளார்.

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் தனியார் CBSE பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளை தேர்வு துவங்க உள்ள நிலையில், தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் கேட்டபோது, CBSE-க்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தனி தேர்வர்களாக தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மாவட்ட DEO, CEO அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போதுதான் பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கே அங்கீகாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி உள்ளதால், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் தவறாக வழி நடத்தியதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நாளை சிபிஎஸ்இ தேர்வு எழுத முடியாது என்பதால், மாநில பாடத்தில் அடுத்த மாதம் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடியும் எனவும் மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதாக பெற்றோர் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால், அதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags: District Collector.ThanjavurThanjavur: A proper investigation will be conducted on the school administration - District Collector Priyanka Pankajam assured!
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies