தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!
Jul 26, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 09:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக  ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு தேர்தல் ஆணையர் சக்பீர் சிங் சந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பது என்றும்,  எனவே 18 வயதை நிறைவு செய்த ஒவ்வொரு குடிமகனும்  எப்போதும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசியலமைப்பு, தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருப்பதாகவும்,  எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.

இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்படையும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருக்கும் இவர், 1988ஆம் ஆண்டு கேரளா ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தவராவார். சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஞானேஷ்குமார், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags: who is gyanesh kumargyanesh kumar election commissionGyanesh Kumar takes charge as the new Chief Election Commissionergyanesh kumar new cecgyanesh kumar newsgyanesh kumar iasgyanesh kumar livedelhiRajiv KumarGyanesh Kumar
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி மூவர் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

Next Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழா – பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி உலா!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies