அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ., எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. போர்களை கண்காணிப்பதை முழு நேர பணியாக எப்.பி.ஐ. மேற்கொண்டு வரும் நிலையில், அதன் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை அமெரிக்க செனட் சபை தேர்வு செய்தது.
51க்கு 49 என்ற வாக்குகள் அடிப்படையில் காஷ் பட்டேலின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.