பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்னவென, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் என்றும், ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் நடத்தினால் என்னவெனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.