பாகிஸ்தானில் சீன ஏர்ஃபோர்ட் : விமானங்கள் வராததால் காட்சிப்பொருளான அவலம்!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் சீன ஏர்ஃபோர்ட் : விமானங்கள் வராததால் காட்சிப்பொருளான அவலம்!

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட, பாகிஸ்தானின் புதிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயணிகள் இல்லாமல், விமானங்கள் வராமல் புதிய குவாதர் விமான நிலையம் ஒரு மர்மமாகவே உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மிகவும் கவர்ச்சி மிக்க கடற்கரை நகரமான (Gwadar) குவாதர் சந்தேகத்திற்கு இடமின்றி பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். பெரும்பான்மையாக மீனவ மக்களே (Gwadar) குவாதர் நகரில் வசிக்கின்றனர்.

2007ஆம் ஆண்டில் முன்னாள் ராணுவத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் (Gwadar) குவாதர் துறைமுகத்தைத் திறந்து வைத்தார். (Gwadar) குவாதர் துறைமுகம் சீனாவால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த (Gwadar) குவாதர் துறைமுகத்தின் உட்பகுதி மற்றொரு ‘ஷென்சென்’ என்று என அழைக்கப்படுகிறது. சீனாவின் மூன்றாவது பெரிய நகரமாக (Gwadar) குவாதர் நகரம் மாறியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சீனா தனது மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தை அரேபிய கடலுடன் இணைக்கும் திட்டத்தின்படி, பலுசிஸ்தான் மற்றும் குவாதரில் கால் பதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 2015ம் ஆண்டு CPEC எனப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டிலான, CPEC திட்டத்தின் மையப் புள்ளியாக (Gwadar) குவாதர் நகரம் மாறியிருக்கிறது.

பாகிஸ்தானின் குவாதர் (Gwadar) துறைமுகம், இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், சீனா நிதியுதவியுடன் குவாதரில் ஒரு சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு, குவாதர் விமான நிலையத் திட்டத்துக்குப் பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தது. 2019ஆம் ஆண்டு, இந்த சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின், குவாதர் விமான நிலையம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்த விமான நிலைய கட்டுமானத்தில் சீனா 90 சதவீதமும், ஓமன் 10 சதவீதமும் முதலீடு செய்துள்ளது.

குவாதர் விமான நிலையம் 240 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குவாதர் விமான நிலையம், பாகிஸ்தானின் மிகப்பெரிய விமான நிலையமாகும். ஆண்டுதோறும் 4,00,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும்.

இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம், பலூச் ஏக்தா சமிதி (Baloch Ekta Samiti) தொடர் போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. தொடர்ந்து, பலுசிஸ்தானில் 13 இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தற்கொலைத் தாக்குதல்களும் நடந்தன.

குவாதர் மாகாணத்தில் ஏற்கெனவே நான்கு விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஓட்மாரா, ஜிவ்னி மற்றும் பஸ்னி ஆகிய மூன்று விமான நிலையங்கள் செயல்படவில்லை.மேலும், பலுசிஸ்தானில் உள்ள பஞ்ச்கோர், துர்பத் கஸ்தார் மற்றும் தால்பந்தேன் ஆகிய இடங்களில் உள்ள பிற விமான நிலையங்களும் செயல்படும் நிலையில் இல்லை.

இந்நிலையில், புதிதாக அதிக செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குவாதர் சர்வதேச விமான நிலையமும் பயணிகள் ,மற்றும் விமானங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது.

தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப் படாத குவாதர் நகரில் மின்சாரம் இல்லை.தேவையான மின்சாரத்துக்கு, பக்கத்து நாடான ஈரானையோ, சூரிய மின்னாற்றலையோ தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது.

மேலும், நகரில் போதுமான சுத்தமான குடிநீர் தண்ணீர் இல்லை. 4,00,000 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த சர்வதேச விமான நிலையத்தால் ,குவாதர் நகரத்தின் வாழும் 90,000 மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று கூறப் படுகிறது.

குவாதர் விமான நிலையம், பாகிஸ்தானுக்கோ அல்லது குவாதருக்கோ பயன்தரும் திட்டம் அல்ல என்றும், மாறாக சீனாவுக்குப் பயன் தரும் திட்டம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாதரில் வசிக்கும் ஒருவர் கூட இந்த விமான நிலையத்தில் பணியமர்த்தப்படவில்லை. குறிப்பாக காவலாளியாகக் கூட பணியமர்த்தப்படவில்லை என்று, பலுசிஸ்தான் அவாமி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் கஃபூர் ஹோத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதலீடுகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு ஆர்வமாக உள்ளது. பலுசிஸ்தான் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த குவாதரில் தனது இராணுவ இருப்பை அதிகரித்துள்ளது.

சீனத் தொழிலாளர்கள் மற்றும் பாகிஸ்தான் விஐபிக்கள் பாதுகாப்பாகச் செல்வற்காக, கிட்டதட்ட வாரத்தில் ஏழு நாட்களும்,எந்த நேரத்திலும் சாலைகள் மூடப் படுகின்றன. குவாதருக்கு வருகை தரும் பத்திரிகையாளர்கள் உளவுத்துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றனர்.

மாற்றம் வரும், மக்கள் வாழ்வாதாரம் உயரும் என்று, பாகிஸ்தான் தந்த வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையால் குவாதர் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது கண்கூட தெரிகிறது.

உள்ளூரில் நடந்து வரும் போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில்,புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் ஒரு மர்மமாகவே உள்ளது.

Tags: pakistanசீனாChinese Airport in Pakistan: No flights are a spectacle!பாகிஸ்தானில் சீன ஏர்ஃபோர்ட்
ShareTweetSendShare
Previous Post

மறக்க முடியாத மகா கும்பமேளா : பிரயாக்ராஜ் AIRPORT பிரம்மிக்கதக்க சாதனை!

Next Post

ஆன்லைன் ரம்மி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies