4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களைப் பாகிஸ்தான் ராணுவம் பாலியல் வன்முறை செய்ததாக ஐநா சபையில் இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் தூதர் சைமா சலீம், காஷ்மீரில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராகக் குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு எதிராகப் பாகிஸ்தான் முன் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் ஐநா சபை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் செயல்பாடு கலங்கமில்லாதது என்று கூறிய அவர், தன் சொந்த மக்களைக் குண்டுவீசி கொல்லும் பாகிஸ்தான் பாதுகாப்பு குறித்து பேசுவது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார். கடந்த மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரே இரவில் நடந்த வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களைப் பாகிஸ்தான் விமானப்படை கொன்றதைக் குறிப்பிட்டு, தவறான தகவல்களைச் சொல்வதன் மூலம் பாகிஸ்தான் உலகை திசைதிருப்ப மட்டுமே முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பர்வதனேனி ஹரிஷ், 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது 30 லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், சுமார் 4 லட்சம் பெண்களைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து பாகிஸ்தான் இராணுவம் கொன்று குவித்தது என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை அனுமதித்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது அரங்கேறிய கொடூரங்களை எல்லாம் மேற்பார்வையிட்ட பாகிஸ்தானின் மோசமான இராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான் டார், பிறகு வங்காளத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியில் இந்திய இராணுவத்திடம் தோல்வியை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம் டாக்காவில் நிபந்தனையின்றி சரணடைந்தது.

அதன்பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகச் சுதந்திரம் பெற்றது. சொந்த மக்களை இனப் படுகொலை செய்த பாகிஸ்தான் உண்மை முகத்தை சர்வதேச அரங்கில் கிழித்து தொங்கவிட்ட ஹரிஷ், உலக நாடுகள் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Indiapakistanpakistan news todaySexual assault on 4 lakh women - Indian representative rips Pakistan at UN
Share
Tweet
SendShare
Previous Post

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

Next Post

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies