ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். அவர், தனது காரில் திண்டல் வழியாக பெருந்துறை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர உணவகம் முன்பு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காரின் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து நடந்தது தெரியவந்தது. இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.