ராமேஸ்வரத்தில் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நாளை திட்டமிட்டபடி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளிக் கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் வட்டாட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.