வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!
Jan 14, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ட்ரோன்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடவு, உழவு, களை என அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

முற்றிலும் இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறும் விவசாயத்தால் களைச் செடிகளும் அதிகளவு வளர்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. களைச் செடிகளை கட்டுப்படுத்துவதோடு, பூச்சிகளையும் அழிப்பதற்கும் ட்ரோன்கள் உதவியோடு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

பயிரின் பரப்பளவு மற்றும் களைச் செடிகளை களைவதற்கும் ட்ரோன்களை பயன்படுத்துவது, வேளைப்பளுவோடு நேரவிரயத்தையும் குறைக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆட்கள் தேவைப்படும் இடத்தில் மூன்று ஆட்கள் மற்றும் ஒரு ட்ரோனுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய் மட்டுமே போதுமானதாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தொடக்கத்தில் ட்ரோன்களை பயன்படுத்த தயங்கிய விவசாயிகள், அதன் மூலம் கிடைத்த பலன்களை அறியத் தொடங்கிய பின் ஆர்வத்துடன் தற்போது அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், விவசாயமும் அதில் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. கால விரயம், வேளைப்பளு ஆகியவற்றோடு செலவையும் குறைக்கும் இந்த ட்ரோன்கள் வருங்காலத்தில் விவசாயப் பணிகளில் இன்றியமையாத சக்தியாக விளங்கும்.

Tags: செலவை குறைக்கும் ட்ரோன்கள்tamil janam tvtamil nadu news todaytn agricultureDrones reduce the cost of farming: Farmers are happy!
ShareTweetSendShare
Previous Post

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி தேசாய்!

Next Post

சீமானிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை – நாதக தொண்டர்கள் போராட்டம்!

Related News

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies