வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ட்ரோன்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடவு, உழவு, களை என அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

முற்றிலும் இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறும் விவசாயத்தால் களைச் செடிகளும் அதிகளவு வளர்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. களைச் செடிகளை கட்டுப்படுத்துவதோடு, பூச்சிகளையும் அழிப்பதற்கும் ட்ரோன்கள் உதவியோடு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

பயிரின் பரப்பளவு மற்றும் களைச் செடிகளை களைவதற்கும் ட்ரோன்களை பயன்படுத்துவது, வேளைப்பளுவோடு நேரவிரயத்தையும் குறைக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆட்கள் தேவைப்படும் இடத்தில் மூன்று ஆட்கள் மற்றும் ஒரு ட்ரோனுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய் மட்டுமே போதுமானதாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தொடக்கத்தில் ட்ரோன்களை பயன்படுத்த தயங்கிய விவசாயிகள், அதன் மூலம் கிடைத்த பலன்களை அறியத் தொடங்கிய பின் ஆர்வத்துடன் தற்போது அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், விவசாயமும் அதில் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. கால விரயம், வேளைப்பளு ஆகியவற்றோடு செலவையும் குறைக்கும் இந்த ட்ரோன்கள் வருங்காலத்தில் விவசாயப் பணிகளில் இன்றியமையாத சக்தியாக விளங்கும்.

Tags: செலவை குறைக்கும் ட்ரோன்கள்tamil janam tvtamil nadu news todaytn agricultureDrones reduce the cost of farming: Farmers are happy!
ShareTweetSendShare
Previous Post

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி தேசாய்!

Next Post

சீமானிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை – நாதக தொண்டர்கள் போராட்டம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies