வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!
Jul 28, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ட்ரோன்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடவு, உழவு, களை என அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

முற்றிலும் இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறும் விவசாயத்தால் களைச் செடிகளும் அதிகளவு வளர்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. களைச் செடிகளை கட்டுப்படுத்துவதோடு, பூச்சிகளையும் அழிப்பதற்கும் ட்ரோன்கள் உதவியோடு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

பயிரின் பரப்பளவு மற்றும் களைச் செடிகளை களைவதற்கும் ட்ரோன்களை பயன்படுத்துவது, வேளைப்பளுவோடு நேரவிரயத்தையும் குறைக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆட்கள் தேவைப்படும் இடத்தில் மூன்று ஆட்கள் மற்றும் ஒரு ட்ரோனுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய் மட்டுமே போதுமானதாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தொடக்கத்தில் ட்ரோன்களை பயன்படுத்த தயங்கிய விவசாயிகள், அதன் மூலம் கிடைத்த பலன்களை அறியத் தொடங்கிய பின் ஆர்வத்துடன் தற்போது அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், விவசாயமும் அதில் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. கால விரயம், வேளைப்பளு ஆகியவற்றோடு செலவையும் குறைக்கும் இந்த ட்ரோன்கள் வருங்காலத்தில் விவசாயப் பணிகளில் இன்றியமையாத சக்தியாக விளங்கும்.

Tags: tamil nadu news todaytn agricultureDrones reduce the cost of farming: Farmers are happy!செலவை குறைக்கும் ட்ரோன்கள்tamil janam tv
ShareTweetSendShare
Previous Post

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி தேசாய்!

Next Post

சீமானிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை – நாதக தொண்டர்கள் போராட்டம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies