வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!
Sep 12, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 06:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ட்ரோன்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடவு, உழவு, களை என அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

முற்றிலும் இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறும் விவசாயத்தால் களைச் செடிகளும் அதிகளவு வளர்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. களைச் செடிகளை கட்டுப்படுத்துவதோடு, பூச்சிகளையும் அழிப்பதற்கும் ட்ரோன்கள் உதவியோடு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

பயிரின் பரப்பளவு மற்றும் களைச் செடிகளை களைவதற்கும் ட்ரோன்களை பயன்படுத்துவது, வேளைப்பளுவோடு நேரவிரயத்தையும் குறைக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 15 ஆட்கள் தேவைப்படும் இடத்தில் மூன்று ஆட்கள் மற்றும் ஒரு ட்ரோனுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய் மட்டுமே போதுமானதாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தொடக்கத்தில் ட்ரோன்களை பயன்படுத்த தயங்கிய விவசாயிகள், அதன் மூலம் கிடைத்த பலன்களை அறியத் தொடங்கிய பின் ஆர்வத்துடன் தற்போது அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், விவசாயமும் அதில் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. கால விரயம், வேளைப்பளு ஆகியவற்றோடு செலவையும் குறைக்கும் இந்த ட்ரோன்கள் வருங்காலத்தில் விவசாயப் பணிகளில் இன்றியமையாத சக்தியாக விளங்கும்.

Tags: செலவை குறைக்கும் ட்ரோன்கள்tamil janam tvtamil nadu news todaytn agricultureDrones reduce the cost of farming: Farmers are happy!
Share
Tweet
SendShare
Previous Post

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி தேசாய்!

Next Post

சீமானிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை – நாதக தொண்டர்கள் போராட்டம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies