தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் இனி தாம்பரத்துக்கு பதிலாக கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் நாளை முதல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகர போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.