+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
Apr 29, 2026, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2025, 06:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுக முன்கூட்டியே தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும், ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால் ஆழமாக பெருமூச்சு விட்டு சில நொடிகள் அமைதி காத்தால் தெளிவாகும் நமது மனம், விடைகளை கண்டுபிடிக்கும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உணர்வுப்பூர்வ ஆதரவு முக்கியம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வுகள் உயர்க் கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளம் என்றும், மாணவர்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள் உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும் என்று கூறியுள்ள அவர், பதற்றமின்றி உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எந்த அச்சமும் இன்றி, தங்களின் கல்வித்திறனை தேர்வெனும் களத்தில் சிறப்பாக வெளிக்காட்டி அனைவரும் சிறப்பான முறையில் வெற்றி பெற்று கனவுகள் மெய்ப்பட வாழ்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வை சந்திக்கும் அனைவருமே வெற்றியாளர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Tags: Tamil Nadu Governor R.N. RaviRN Ravi greetingsXII public examinationstamilnadu plus to exam today
ShareTweetSendShare
Previous Post

இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு – சுமார் 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

Next Post

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் – தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies