பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!
Oct 9, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும், மகன் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற நிலையில் அவருக்கு எப்போதும் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி – சுபலட்சுமி தம்பதியின் மகன் சுனில்குமார், 12ம் வகுப்பு பயின்று வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மகனை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், சுபலட்சுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார். இந்த சோகத்திலும் சுனில்குமார் ப்ளஸ்-டூ தேர்வு எழுத முடிவெடுத்தார். அவர் தனது தாயிடம் ஆசிப்பெற்றுவிட்டு தேர்வெழுத சென்றது அனைவரையும் கண்கலங்க செய்தது.

பின்பு தனது தாயின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர் சுனில் குமாரிடம் பேசியதாக தெரிவித்தார். மாணவரின் சகோதரனாக துன்பத்தை பகிர்ந்துகொண்டதாகவும் “தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

எப்போதும் துணை நிற்போம்” என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் செய்தியையும் தெரிவித்தாகவும் கூறியுள்ளார். சுனில்குமார் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும், அம்மாவின் பெரும் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் எனவும் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.

Tags: நெல்லைSon attended his mother's funeral after writing his Plus 2 exams!
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைவு : முதலமைச்சர் ரேகா குப்தா குற்றச்சாட்டு!

Next Post

மார்ச் 7ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு!

Related News

மூதாட்டியின் முழு உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies