காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!
Jul 24, 2025, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புதுவிதமான மர்ம நோயினால் 60-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அழுகை நோய் என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொற்றுநோய் எங்கிருந்து தோன்றியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கொரொனா தொற்று நோய் வந்ததில் இருந்து, ஒவ்வொரு நாளும் புது புது வைரஸ்கள் உருவாகி வருகின்றன. புதிய மர்ம நோய்களால் நாள்தோறும் உலகமெங்கும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் MPOX தொற்று நோய் மக்களை பாதித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் மற்ற நாடுகளுக்கும் எச்சரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், காங்கோ ஜனநாயகக் குடியரசில், ‘Disease X’ என்னும் மர்ம நோயால், சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோய்க்கு குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் வடமேற்குப் பகுதியில் புதுவிதமான ஒரு மர்மநோய் பரவி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள இரண்டு தொலைதூர கிராமங்களான போலோகோ மற்றும் போமேட் ஆகியவற்றில் கடந்த மாதத்தில் மர்ம நோய் பாதிப்புகள் திடீரென அதிகரித்தன.

கடந்த ஜனவரி 21 ஆம் தேதி, வெளவால் கறியைச் சாப்பிட்ட 48 மணி நேரத்துக்குள், 5 வயதான மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். (Crying Disease) அழுகை நோய் என அழைக்கப்படும் இந்த மர்மநோய்க்கு, 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த அழுகை நோய்க்கு இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

போலோகோ கிராமத்தில் அழுகை நோய் பரவலுக்கு வௌவால் இறைச்சியை உட்கொண்டதே காரணம் என்று கண்டறிய பட்டுள்ளது. ஆனால் போமேட் கிராமத்தில், நிலைமை இன்னும் சிக்கலாக உள்ளது. சுமார் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலும் மலேரியா உட்பட பல்வேறு நோய்க்கான அறிகுறிகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அழுகை நோய்க்கான காரணம் தன்மையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல், வாந்தி, உள் ரத்தப்போக்கு போன்ற ஆரம்ப கால அறிகுறிகள் இருப்பதாகவும், நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது உடல்வலி, கழுத்து மற்றும் மூட்டு வலி, மூச்சு வாங்குதல், வியர்த்துக் கொட்டுதல், தீவிர தாகம் ஆகியவை ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் இடைவிடாத அழுகையும், ரத்த வாந்தியும் ஏற்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு, மார்பர்க், மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களில் தென்படக்கூடிய அறிகுறிகள் எல்லாம் இந்த மர்ம நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் தென்படுவதாகவும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சோதனை கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களுடன் நிபுணர்கள் குழுவை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அழுகை நோய் பரவியுள்ள பகுதியில் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, அருகில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. எனவே, உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்க முடியாத சூழல் உள்ளது.

மேலும், அழுகை நோயால் பாதிக்கப் பட்டவர்களைத், தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழுக்களாக நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இந்த நோய்க்கான உண்மையான காரணத்தையும் புது வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதையும் கண்டறிய முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அழுகை நோயின் அறிகுறிகள் வந்தவுடனேயே உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது மிக ஆபத்தான அறிகுறி என எச்சரித்துள்ளனர்.

அழுகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது, சர்வதேச அளவில் கவலை பொது சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags: Mysterious disease in Congo: Many people have died after vomiting blood!காங்கோவில் மர்ம நோய்ஆப்பிரிக்கா
ShareTweetSendShare
Previous Post

திமுகவை பொருத்தவரை குழந்தைகளின் எதிர்காலத்தை விட அரசியலே முக்கியம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies