மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!
Apr 27, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். விமானப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் உதான் யாத்ரீ கபே குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு இருப்பது விமானப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் யாத்ரி கபே எனும் பெயரில் மலிவு விலை உணவகங்களை தொடங்க முடிவு செய்தது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கபே மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கபேவில் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த விமான போக்குவரத்து அமைச்சகம் சென்னை விமான நிலையத்திலும் கபே தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் டீ பத்து ரூபாய்க்கும், காபி இருபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர தண்ணீர் பாட்டில், சமோசா, வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும் குறைவாக விலையில் விற்பனை செய்யப்படுவதால் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மத்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் உணவு வகைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் சென்றாலே உணவுக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், குறைந்த விலையில் தரமான உணவுப் பண்டங்களை வழங்கும் இந்த உதான் யாத்ரீ கபே திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் திட்டமாக அமைந்திருக்கிறது.

Tags: chennai airportQuality food at affordable prices: Udan Yatri Cafe!உதான் யாத்ரீ கபேதரமான உணவுவிமான போக்குவரத்துத்துறை
ShareTweetSendShare
Previous Post

காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!

Next Post

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

Related News

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies