மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!
Jul 27, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். விமானப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் உதான் யாத்ரீ கபே குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு இருப்பது விமானப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் யாத்ரி கபே எனும் பெயரில் மலிவு விலை உணவகங்களை தொடங்க முடிவு செய்தது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கபே மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கபேவில் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த விமான போக்குவரத்து அமைச்சகம் சென்னை விமான நிலையத்திலும் கபே தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் டீ பத்து ரூபாய்க்கும், காபி இருபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர தண்ணீர் பாட்டில், சமோசா, வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும் குறைவாக விலையில் விற்பனை செய்யப்படுவதால் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மத்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் உணவு வகைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் சென்றாலே உணவுக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், குறைந்த விலையில் தரமான உணவுப் பண்டங்களை வழங்கும் இந்த உதான் யாத்ரீ கபே திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் திட்டமாக அமைந்திருக்கிறது.

Tags: chennai airportQuality food at affordable prices: Udan Yatri Cafe!உதான் யாத்ரீ கபேதரமான உணவுவிமான போக்குவரத்துத்துறை
ShareTweetSendShare
Previous Post

காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!

Next Post

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies