அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி - இளைஞர் கைது!
May 6, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 02:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. இந்த ராமர் கோயில் பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்காக அயோத்தி மாவட்டத்தின் பைசாபாத் நகரின் மில்கிபூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் அபுபக்கர் என்ற இளைஞரை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் தேர்வு செய்துள்ளனர். இவருக்கு தீவிரவாத அமைப்பின் நெட்வொர்க் ஒன்றின் மூலம் இரண்டு கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர், ஹரியானா சிறப்பு படை போலீஸாருடன் இணைந்து அப்துல் ரகுமானை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து பென் டிரைவ் ஒன்று மீட்கப்பட்டது.

அதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடம், தாக்குதல் நடத்துபவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கியிருந்தன. இந்த சதியில் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரயில்வேயில் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரை சேர்ந்த பவானி சிங் என்பவரை, ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் `ஹனி டிராப்` மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் மயங்கிய பவானி சிங், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த ராஜஸ்தான் போலீசார், பவானி சிங்கை கைது செய்துள்ளனர்.

Tags: Milkipur​​Faizabaduttar pradeshayodhyaayodhya ramar templepakistan isiAbu Bakar
ShareTweetSendShare
Previous Post

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

Next Post

பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால் பாஜக பங்கேற்கும் – அண்ணாமலை

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies