ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.