மாணவர்களுக்கு 3 மொழிகள் மட்டுமல்ல; பல மொழிகளை ஊக்குவிப்பேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உலகளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதாக கூறினார்.
பல்கலைக்கழகங்களில் சர்வதேச மொழி உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன் எனக்கூறிய சந்திரபாபு நாயுடு, அறிவு வேறு, மொழி வேறு என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்தார்.