தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Oct 6, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Web Desk by Web Desk
Mar 7, 2025, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராஜாதித்ய சோழன் அணிவகுப்பு மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதனை திறந்த வெளி வாகனத்தில் பயணித்தபடி அமித்ஷா பார்வையிட்டார்.

இதையடுத்து “பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணி வரும் 31-ம் தேதியன்று கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைகிறது.

இந்நிலையில் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றிய  அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒவ்வொரு வீரரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து உள்ளனர் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வினை தமிழில் எழுத பிரதமர் மோடிதான் காரணம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: Prosperous Indiacentral governmentprime minister modihome minister amit shahranipet56th anniversary of the Central Industrial Security ForceArakkonam TakkolamSafe Marine Resources
ShareTweetSendShare
Previous Post

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

Next Post

தமிழக மக்களை ஏமாற்றும் முதல்வர் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies