தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Jul 30, 2026, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராஜாதித்ய சோழன் அணிவகுப்பு மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதனை திறந்த வெளி வாகனத்தில் பயணித்தபடி அமித்ஷா பார்வையிட்டார்.

இதையடுத்து “பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணி வரும் 31-ம் தேதியன்று கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைகிறது.

இந்நிலையில் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றிய  அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒவ்வொரு வீரரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து உள்ளனர் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வினை தமிழில் எழுத பிரதமர் மோடிதான் காரணம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: ranipet56th anniversary of the Central Industrial Security ForceArakkonam TakkolamSafe Marine ResourcesProsperous Indiacentral governmentprime minister modihome minister amit shah
ShareTweetSendShare
Previous Post

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

Next Post

தமிழக மக்களை ஏமாற்றும் முதல்வர் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies