தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Apr 29, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராஜாதித்ய சோழன் அணிவகுப்பு மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதனை திறந்த வெளி வாகனத்தில் பயணித்தபடி அமித்ஷா பார்வையிட்டார்.

இதையடுத்து “பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணி வரும் 31-ம் தேதியன்று கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைகிறது.

இந்நிலையில் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றிய  அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒவ்வொரு வீரரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து உள்ளனர் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வினை தமிழில் எழுத பிரதமர் மோடிதான் காரணம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: ranipet56th anniversary of the Central Industrial Security ForceArakkonam TakkolamSafe Marine ResourcesProsperous Indiacentral governmentprime minister modihome minister amit shah
ShareTweetSendShare
Previous Post

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

Next Post

தமிழக மக்களை ஏமாற்றும் முதல்வர் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies