பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!
Jan 14, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!

Murugesan M by Murugesan M
Mar 8, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் ஜெகதீஸ்வரி சசிதரனின் சவால்கள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை சிறு செய்தித் தொகுப்பாக பார்க்கலாம்.

1990 களில் இலங்கையில் நடைபெற்ற போரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கானோர்களில் ஒருவர் தான் இந்த ஜெகதீஸ்வரி சசிதரன். 7 மாத குழந்தையாக தமிழகத்திற்கு வந்த ஜெகதீஸ்வரி, தற்போது நாட்டியத்தில் சாதிக்கத் துடிக்கும் ஏராளமான மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார்.

நடனம் மீது சிறுவயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜெகதீஸ்வரி, சினிமாத்துறைக்குள் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடனக் கலையை தீவிரமாக பயிலத் தொடங்கினார். நடனத்திலிருந்த ஆர்வம் படிப்படியாக பரதநாட்டியத்தின் பக்கம் திரும்பியது. இலங்கையைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பரதநாட்டியத்தை கற்க பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஜெகதீஸ்வரி, பின்னாளில் அதில் தனித்துவமிக்கவராகவும் திகழத் தொடங்கினார்.

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் இசைக்கல்லூரியில் சேர்ந்த ஜெகதீஸ்வரி, பரதக் கலையை பயின்றி சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றதோடு, பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் பரத நாட்டியத்தை ஆடி, தனது நடன அசைவால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய ஜெகதீஸ்வரி, தற்போது தவிர்க்க முடியாத பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

பரதக் கலையை கற்க தான் சந்தித்த இடையூறுகளை பிறர் சந்தித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெகதீஸ்வரி, ஏற்றத்தாழ்வின்றி ஏழை மாணவர்கள் பலருக்கு தான் கற்ற பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார்.

ஜெகதீஸ்வரி சசிதரனின் கலைத்திறனை பாராட்டி நூற்றுக்கணக்கான விருதுகள் பல்வேறு சமூக அமைப்புகளின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கடினமான நடன அசைவுகளை மிக எளிதாக பயிற்றுவிக்கும் ஜெகதீஸ்வரியால் பல நடன ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.

இலங்கையிலிருந்து வந்த அகதி என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்து, பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார் பரத நடன ஆசிரியை ஜெகதீஸ்வரி சசிதரன்.

Tags: இலங்கைwomens dayA shining dance star in India!நாட்டிய தாரகைஜெகதீஸ்வரி சசிதரன்
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : மூன்று நாளில் 3 லட்சம் பேர் ஆதரவு!

Next Post

முடிதிருத்தும் தொழிலில் சாதித்த பெண்மணி!

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies