பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!
Jul 28, 2026, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!

Murugesan M by Murugesan M
Mar 8, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் ஜெகதீஸ்வரி சசிதரனின் சவால்கள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை சிறு செய்தித் தொகுப்பாக பார்க்கலாம்.

1990 களில் இலங்கையில் நடைபெற்ற போரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கானோர்களில் ஒருவர் தான் இந்த ஜெகதீஸ்வரி சசிதரன். 7 மாத குழந்தையாக தமிழகத்திற்கு வந்த ஜெகதீஸ்வரி, தற்போது நாட்டியத்தில் சாதிக்கத் துடிக்கும் ஏராளமான மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார்.

நடனம் மீது சிறுவயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜெகதீஸ்வரி, சினிமாத்துறைக்குள் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடனக் கலையை தீவிரமாக பயிலத் தொடங்கினார். நடனத்திலிருந்த ஆர்வம் படிப்படியாக பரதநாட்டியத்தின் பக்கம் திரும்பியது. இலங்கையைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பரதநாட்டியத்தை கற்க பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஜெகதீஸ்வரி, பின்னாளில் அதில் தனித்துவமிக்கவராகவும் திகழத் தொடங்கினார்.

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் இசைக்கல்லூரியில் சேர்ந்த ஜெகதீஸ்வரி, பரதக் கலையை பயின்றி சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றதோடு, பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் பரத நாட்டியத்தை ஆடி, தனது நடன அசைவால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய ஜெகதீஸ்வரி, தற்போது தவிர்க்க முடியாத பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

பரதக் கலையை கற்க தான் சந்தித்த இடையூறுகளை பிறர் சந்தித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெகதீஸ்வரி, ஏற்றத்தாழ்வின்றி ஏழை மாணவர்கள் பலருக்கு தான் கற்ற பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார்.

ஜெகதீஸ்வரி சசிதரனின் கலைத்திறனை பாராட்டி நூற்றுக்கணக்கான விருதுகள் பல்வேறு சமூக அமைப்புகளின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கடினமான நடன அசைவுகளை மிக எளிதாக பயிற்றுவிக்கும் ஜெகதீஸ்வரியால் பல நடன ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.

இலங்கையிலிருந்து வந்த அகதி என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்து, பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார் பரத நடன ஆசிரியை ஜெகதீஸ்வரி சசிதரன்.

Tags: இலங்கைwomens dayA shining dance star in India!நாட்டிய தாரகைஜெகதீஸ்வரி சசிதரன்
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : மூன்று நாளில் 3 லட்சம் பேர் ஆதரவு!

Next Post

முடிதிருத்தும் தொழிலில் சாதித்த பெண்மணி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies