லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!
Mar 15, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இளம் ராணுவ வீரர்கள் 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அந்த உணர்ச்சிமிகு நிகழ்வு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலகில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களில் 2-வது கடுமையான பயிற்சி மையம் என்றால், அது சென்னை தாம்பரத்தில் உள்ள Officers Training Academy தான். சுமார் 80 ஆண்டுகள் பழமையான இந்த அகாடமியில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக கடுமையான மற்றும் சவாலான பயிற்சி மேற்கொண்ட இளம் இந்திய ராணுவ வீரர்கள் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ முப்படை பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ முன்னிலையில் 169 பேர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் 34 பெண்கள் மற்றும் 12 நட்பு நாடுகளை சேர்ந்த இளம் அதிகாரிகளும் அடங்குவர்.

முன்னதாக பாரம்பரிய முறையிலான பாசிங் அவுட் செரிமணி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மிடுக்கான தோற்றத்துடன் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் புதிய அதிகாரிகள் அணிவகுப்பை அரங்கேற்றினர்.

பாரம்பரியமான அணிவகுப்பை தொடர்ந்து இளம் அதிகாரிகள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பதவியேற்பு மற்றும் உறுதிமொழிக்கான முக்கிய தருணத்தில் அனைவரும் ஒருங்கிணைந்தனர். பிள்ளைகள் ராணுவ அதிகாரிகளாக வேண்டும் என பலநாள் கனவு கண்ட பெற்றோர்கள் கைகளால், தங்களது தோள்பட்டையில் கருப்பு துணிகளால் மூடியிருக்கும் அதிகாரப்பூர்வ நட்சத்திரங்களை திறந்து வைக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.

பதவியேற்புக்கான முத்திரைகளை தோள்களில் பதித்தவாறு உறுதி மொழியேற்றுக் கொண்ட இளம் லெப்டினன்ட் அதிகாரிகளுக்கு, பயிற்சி வழங்கிய மூத்த அதிகாரிகள் முதல் சல்யூட் அடித்து கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து தங்களின் மூத்த அதிகாரிகளுக்கு இளம் லெப்டினன்ட் அதிகாரிகள் முதல் சல்யூட்டை சமர்ப்பணம் செய்தனர்,

தொடர்ந்து தாம்பரம் OTA கமாண்டன்ட் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் AJ பெர்னாண்டஸ் உடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி புஷ் அப்ஸ் எடுத்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக இந்திய ராணுவத்தின் பாடலை அனைவரும் கம்பீரமாக பாட, மூவர்ண கொடியுடன் கூடிய பலூன்களை பறக்கவிட்டு இளம் வீரர்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கொடிகளை பறக்க விட்ட பின்னர் உற்சாகத்தில் ஆழ்ந்த இளம் லெப்டினன்ட் அதிகாரிகள், ஒருவரை ஒருவர் தூக்கியும் கட்டியணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தனது 3-வது முயற்சியில் மெரிட் வாய்ப்பு கிடைத்து லெப்டினன்ட் அதிகாரியாக உருவெடுத்துள்ள செளமியா, பெண்கள் தயக்கத்தை தவிர்த்து தைரியமாக செயலாற்ற வேண்டும் என கூறினார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கௌரவமான மற்றும் கடினமான ராணுவ பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இளம் அதிகாரிகள் நாளைய பாரதத்தின் பாதுகாப்பு அரண்களாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Tags: Lieutenant officers take oath: The country's security bulwark!இளம் ராணுவ வீரர்கள் 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்பு
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு அளிக்க சென்ற பாஜகவினர் கைது!

Next Post

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies