லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!
Jun 14, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இளம் ராணுவ வீரர்கள் 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அந்த உணர்ச்சிமிகு நிகழ்வு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலகில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களில் 2-வது கடுமையான பயிற்சி மையம் என்றால், அது சென்னை தாம்பரத்தில் உள்ள Officers Training Academy தான். சுமார் 80 ஆண்டுகள் பழமையான இந்த அகாடமியில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக கடுமையான மற்றும் சவாலான பயிற்சி மேற்கொண்ட இளம் இந்திய ராணுவ வீரர்கள் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ முப்படை பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ முன்னிலையில் 169 பேர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் 34 பெண்கள் மற்றும் 12 நட்பு நாடுகளை சேர்ந்த இளம் அதிகாரிகளும் அடங்குவர்.

முன்னதாக பாரம்பரிய முறையிலான பாசிங் அவுட் செரிமணி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மிடுக்கான தோற்றத்துடன் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் புதிய அதிகாரிகள் அணிவகுப்பை அரங்கேற்றினர்.

பாரம்பரியமான அணிவகுப்பை தொடர்ந்து இளம் அதிகாரிகள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பதவியேற்பு மற்றும் உறுதிமொழிக்கான முக்கிய தருணத்தில் அனைவரும் ஒருங்கிணைந்தனர். பிள்ளைகள் ராணுவ அதிகாரிகளாக வேண்டும் என பலநாள் கனவு கண்ட பெற்றோர்கள் கைகளால், தங்களது தோள்பட்டையில் கருப்பு துணிகளால் மூடியிருக்கும் அதிகாரப்பூர்வ நட்சத்திரங்களை திறந்து வைக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.

பதவியேற்புக்கான முத்திரைகளை தோள்களில் பதித்தவாறு உறுதி மொழியேற்றுக் கொண்ட இளம் லெப்டினன்ட் அதிகாரிகளுக்கு, பயிற்சி வழங்கிய மூத்த அதிகாரிகள் முதல் சல்யூட் அடித்து கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து தங்களின் மூத்த அதிகாரிகளுக்கு இளம் லெப்டினன்ட் அதிகாரிகள் முதல் சல்யூட்டை சமர்ப்பணம் செய்தனர்,

தொடர்ந்து தாம்பரம் OTA கமாண்டன்ட் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் AJ பெர்னாண்டஸ் உடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி புஷ் அப்ஸ் எடுத்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக இந்திய ராணுவத்தின் பாடலை அனைவரும் கம்பீரமாக பாட, மூவர்ண கொடியுடன் கூடிய பலூன்களை பறக்கவிட்டு இளம் வீரர்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கொடிகளை பறக்க விட்ட பின்னர் உற்சாகத்தில் ஆழ்ந்த இளம் லெப்டினன்ட் அதிகாரிகள், ஒருவரை ஒருவர் தூக்கியும் கட்டியணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தனது 3-வது முயற்சியில் மெரிட் வாய்ப்பு கிடைத்து லெப்டினன்ட் அதிகாரியாக உருவெடுத்துள்ள செளமியா, பெண்கள் தயக்கத்தை தவிர்த்து தைரியமாக செயலாற்ற வேண்டும் என கூறினார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கௌரவமான மற்றும் கடினமான ராணுவ பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இளம் அதிகாரிகள் நாளைய பாரதத்தின் பாதுகாப்பு அரண்களாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Tags: Lieutenant officers take oath: The country's security bulwark!இளம் ராணுவ வீரர்கள் 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்பு
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு அளிக்க சென்ற பாஜகவினர் கைது!

Next Post

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies