பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!
Jul 28, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இரவு நேரத்தில் சென்னைக்கு திரும்புவோர், போதிய பேருந்துகள் இல்லாத பட்சத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

அப்படியான பயணம் சில நேரங்களில் மிகுந்த ஆபத்துமிக்க பயணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறவும் அப்பயணங்கள் பெரும் காரணங்களாக உள்ளன.

இரவு நேரங்களில் ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கத்தில் க்யூ ஆர் கோடு பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகள், அசாதாரண சூழலை உணர்ந்தால், தங்களுடைய செல்போனில் அந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து SOS பட்டனை அழுத்தினால், குறிப்பிட்ட வாகனத்தின் அனைத்து விவரங்களும் காவல்துறையின் கவனத்திற்கு சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கவே அச்சப்படும் சூழலில், சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் க்யூ ஆர் கோடு திட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பொதுப்போக்குவரத்து என அனைத்துவிதமான இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த க்யூ ஆர் கோடு திட்டம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags: QR கோடு ஒட்டும் திட்டம்CHENNAI NEWSwomen safetychennai news todayNew technology to protect women: QR code sticking project!
ShareTweetSendShare
Previous Post

லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!

Next Post

உக்ரைனை பாதுகாக்க அமைதிப்படை : பிரிட்டன் தலைமையில் அணிதிரண்ட ஐரோப்பா!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies