சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி!
Mar 15, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி!

தோல்வியே காணாமல் தொடரை வென்ற இந்திய அணி!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக டேரல் மிச்சல் 63 ரன்களும், மைக்கல் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர், 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 31 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கோலி ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சிஅளித்தார். நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், அக்சர் பட்டேல் 29 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் இந்திய அணி 49 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து கோப்பையைக் கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் கோப்பை வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடிய விராட் கோலி – ரோஹித் சர்மா, ஸ்ட்ம்ப்பை வைத்து தாண்டியா ஆட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக Runner Up பட்டத்தை வென்றது.

Tags: Cricketindia wonThe Indian team won the Champions Trophy!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்குகிறது!

Next Post

தேசியக் கொடியை ஏந்தியபடி இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் !

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

வரும் 28ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் – 20 போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies