திமுக அரசை உலுக்கும் மதுபான ஊழல்!
Aug 17, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசை உலுக்கும் மதுபான ஊழல்!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்திற்கான மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் ஒட்டுமொத்த திமுக அரசையும் உலுக்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் மதுபான ஊழல் குறித்தும், அமலாக்கத்துறையின் விசாரணை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வசமுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனம், பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை வழங்கும் மதுபான ஆலைகள் பெரும்பாலும் திமுகவினர் மற்றும் ஆதரவாளர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

மதுபான ஆலைகளில் இருந்து மதுபானக் கிடங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக மதுபானக் கடைகளுக்கே மதுபானங்களை கொண்டு சென்றதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கான கலால் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடர்பான புகாரில் இருந்த முகாந்திரத்தின் படி அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.

டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மதுபானம் கொள்முதல் செய்யப்படும் ஆலைகளின் தலைமை அலுவலகங்கள், மதுபான ஆலைகளின் அதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடு என சென்னை, கரூர் உள்ளிட்ட 25க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

மூன்று நாட்கள் நீடித்த சோதனையில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் திமுக எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாக கருதப்படும் அக்கார்டு டிஸ்லரிஸ் மது ஆலை அலுவலகத்தில் கட்டுக்கட்டாக முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டிருப்பதாகும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திமுக மேலிடத்திற்கு நெருக்கமானவராக அறியப்படும் எஸ் என் ஜெயமுருகனின் எஸ் என் ஜே மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகத்திலிருந்தும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் கலால் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லியில் மதுபானக் கொள்கையில் நடைபெற்ற ஊழலில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்த நிலையில், சத்தீஸ்கரிலும் மதுபான ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் மதுபான ஊழல் நடைபெற்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கால் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை சந்தித்து வரும் திமுக அரசு மீதான மதுபான ஊழல் முறைகேடு உறுதி செய்யப்பட்டால், டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags: MK Stalintamil nadu govermenttn govermentதிமுகLiquor scandal shaking the DMK government!மதுபான ஊழல்
ShareTweetSendShare
Previous Post

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி காணிக்கை!

Next Post

சொத்து வரியை குறைக்க வேண்டும் : ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

Related News

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies