தமிழகத்தில் மதுபான ஊழல் - சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!
Nov 3, 2025, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மதுபான ஊழல் – சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 07:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ஆலை குழுமத்தின் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும் சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு கலால் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட வேண்டிய மது பாட்டில்கள் ஆலைகளில் இருந்து நேரடியாக கடைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அமலாக்கத்துறையின் சோதனை ஊழலுக்கான முகாந்திரம் இல்லாமல் நடத்த வாய்ப்பில்லை என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்குள் நடைபெற்ற சோதனை குறித்து தமிழக அரசு மவுனம் காக்கும் நிலையில், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசியல் களத்தையும் புரட்டிப் போடும் அளவுக்கு டாஸ்மாக் மெகா ஊழல் நடந்துள்ளதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டிருப்பது வெட்கக் கேடு என அதிமுக விமர்சித்துள்ளது.

முன்னதாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுவதாக ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் புகாரளித்திருந்தார்.

மேலும், மதுபான ஊழல் முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், ஊழல் புகாரை மறைக்கவே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு என திமுக அரசு நாடகமாடுவதாக விமர்சித்துள்ளன.

மேலும் மதுபான ஊழல் புகாரால் டெல்லி, சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: Enforcement Directorate raidSNJ Distillery GroupDMK MP Jagathrakshagan.ChennaiTamil Nadutasmacegmore
ShareTweetSendShare
Previous Post

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனியாக சென்றவரை உள்நோயாளியாக அனுமதிக்க மறுப்பு!

Related News

உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!

கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோயிலுக்கு சொந்தமான மாடுகளை திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது!

சேலம் சாயக்கழிவு பட்டறை திறக்க எதிர்ப்பு – வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றம்!

லாலு பிரசாத்தின் ஹாலோவீன் கொண்டாட்டம் – பாஜக விமர்சனம்!

உலகின் டாப் 20 பணக்காரர்கள் : 17-வது இடத்தில் முகேஷ் அம்பானி

Load More

அண்மைச் செய்திகள்

உலக கோப்பையுடன் தூங்கும் இந்திய வீராங்கனைகள்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் களைகட்டிய சீசன் – அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை!

ஏற்காடு : மழைக்கு ஒழுகும் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வகுப்பறைகள்!

இளம் வயதில் கோடீஸ்வரர்கள் – இந்திய வம்சாவளியினர் அசத்தல்!

போதைப்பொருள் கடத்தல் – வெனிசுலா அதிபர் மீது டிரப்ம் குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

அர்மேனியா : பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 17 மாணவர்கள் காயம்!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு – பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies