தமிழகத்தில் மதுபான ஊழல் - சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!
Aug 1, 2025, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மதுபான ஊழல் – சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 07:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ஆலை குழுமத்தின் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும் சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு கலால் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட வேண்டிய மது பாட்டில்கள் ஆலைகளில் இருந்து நேரடியாக கடைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அமலாக்கத்துறையின் சோதனை ஊழலுக்கான முகாந்திரம் இல்லாமல் நடத்த வாய்ப்பில்லை என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்குள் நடைபெற்ற சோதனை குறித்து தமிழக அரசு மவுனம் காக்கும் நிலையில், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசியல் களத்தையும் புரட்டிப் போடும் அளவுக்கு டாஸ்மாக் மெகா ஊழல் நடந்துள்ளதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டிருப்பது வெட்கக் கேடு என அதிமுக விமர்சித்துள்ளது.

முன்னதாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுவதாக ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் புகாரளித்திருந்தார்.

மேலும், மதுபான ஊழல் முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், ஊழல் புகாரை மறைக்கவே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு என திமுக அரசு நாடகமாடுவதாக விமர்சித்துள்ளன.

மேலும் மதுபான ஊழல் புகாரால் டெல்லி, சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: ChennaiTamil NadutasmacegmoreEnforcement Directorate raidSNJ Distillery GroupDMK MP Jagathrakshagan.
ShareTweetSendShare
Previous Post

மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனியாக சென்றவரை உள்நோயாளியாக அனுமதிக்க மறுப்பு!

Related News

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

ஹரியானா மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்!

பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies