ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயம் மற்றும் விளையாட்டுக்களுக்கு நேர கட்டுப்பாடு உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.