மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், அமாவாசை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மாதந்தோறும் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி முதல் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை முதலே கோயில் அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே அனுமதி எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க கூடாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.