சென்னையில் ரூ.641 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் : நிதின் கட்கரி
Oct 21, 2025, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சென்னையில் ரூ.641 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் : நிதின் கட்கரி

Web Desk by Web Desk
Mar 13, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ரூ.641.92 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர் கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட நாடு முழுவதும் 35 இடங்களில் பலவகையான சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன என்றார். தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு முகமைகளால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பலவகையான சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களில் கிடங்கு, ரயில்வே தொடர்பு, ரயில் முனையம், சுங்கம், சரக்குப் பெட்டக முனையம், டிரக் நிறுத்தம், பெருந்திரளாக சரக்கு இருப்பு வைக்கும் இடம், எரிபொருள் நிலையம், மின்சார வாகன மின்னேற்று நிலையம், தங்கும் விடுதி, உணவு விடுதி, திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள இத்தகைய பூங்காக்களை தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம், சென்னை துறைமுக ஆணையம், தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு கழகம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு  துணை நிறுவனம் அமைக்கும் என்று கூறினார்.

சென்னையில் அமைக்கப்படவுள்ள  சரக்குப் போக்குவரத்துப் பூங்காவுக்கான மொத்த செலவு ரூ.641.92 கோடியாகும். இதில் தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனத்தின் பங்கு 40.18 சதவீதமாகவும், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் பங்கு 26 சதவீதமாகவும், சென்னை துறைமுக ஆணையத்தின் பங்கு 26.02 சதவீதமாகவும், தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு கழகத்தின் பங்கு 7.8 சதவீதமாகவும் இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

மொத்த செலவுத் தொகையில் தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனம் ரூ.257.90 கோடியையும், தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு கழகம் ரூ.50 கோடியையும் திட்டத்தை செயல்படுத்தும் சிறப்பு துணை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளன என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்த சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து செலவு குறைவதோடு, சாலையிலிருந்து ரயில் பாதைக்கும், ரயில் பாதையிலிருந்து சாலைக்கும் தடையின்றி சரக்குகளை கொண்டு செல்லவும் முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சரக்குகளை கையாள நவீன மற்றும் எந்திரப் பயன்பாடு இருப்பதால் சரக்குகளை கையாளும் செலவும் குறையும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தப் பூங்காக்களிலேயே மிகப்பெரிய கிடக்குகள் இருப்பதால் சரக்குகளை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று இருப்பு வைப்பதற்கான செலவும் குறையும் என்ற விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: ChennaiTamil Naduநிதின் கட்கரிA multi-modal freight park to be set up in Chennai at a cost of Rs. 641 crore: Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

பேருந்தின் முன்பகுதியில் மோதிய கார்!

Next Post

உள்கட்டமைப்பில் குஜராத் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது : அமித் ஷா

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies