பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்,
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவது சாத்தியமில்லை என கூறிய அவர், முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் தான் மாநிலம் வளர்ச்சியடையும் என தெரிவித்தார்.