கமுதி அருகே நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மூக்கம்மாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 52 ஜோடி இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
வெற்றி இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து, முதல் 4 இடங்களைப் பிடித்த பந்தய வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.