கன்னியாகுமரி அருகே 193-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை நெட்டியான் விளை அய்யா வைகுண்டர் திருப்பதி கோயிலில் 193-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 75-வது ஆண்டு திருஏடு வாசிப்பு விழா கடந்த 7ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
முக்கிய நிகழ்வாக நேற்று திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.