2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டுள்ள புதிய வீரர்களுக்கு, அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு வரவேற்பு அளித்துள்ளது.
ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட தமிழக வீரர் நடராஜன், கருண் நாயர் உள்ளிட்டோர் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக அந்த அணி நிர்வாகம் சார்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.