உத்தரப்பிரதேசத்தில் இறுதிச் சடங்கிற்கு 15 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
சீதாபூர் மாவட்டத்தில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சாரதா ஆற்றில் படகு மூலம் 15 பேர் பயணித்தனர்.
எதிர்பாராதவிதமாக அந்த படகு ஆற்றில் கவிழ்ந்த நிலையில், நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.