மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், தாய்மார்கள் உட்பட 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.