தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.
அவருக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாகவும், இதுகுறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்