மகாராஷ்டிராவில் டெம்போ டிராவலர் வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
புனேவில் உள்ள தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 12 பேர் டெம்போ வாகனத்தில் பயணித்துள்ளனர். ஹிஞ்சிவாடி அருகே அவர்கள் பயணித்தபோது வாகனத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
தீ மளமளவெனப் பரவிய நிலையில், அதில் பயணித்த 4 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 ஊழியர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.