டெல்லியில் உள்ள வாய்க்கால்களில் முதலமைச்சர் ரேகா குப்தா ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் யமுனை நதியைச் சுத்தம் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ரேகா குப்தா ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக லோதி சாலையில் உள்ள வாய்க்காலில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாய்க்காலில் தேங்கி நிற்கும் சேற்றை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், இதற்குத் தீர்வு காணத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு மழைக் காலத்திற்குத் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.