டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது விற்பனை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரூபாய் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.