மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 7 மாதங்களுக்குப் பிறகு தனியார் மருத்துவமனை நிர்வாகம் பெண் மருத்துவரின் இறப்பு சான்றிதழைப் பெற்றோரிடம் வழங்கியுள்ளது.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவருக்குக் கடந்த ஜனவரியில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தற்போது பெண் மருத்துவரின் இறப்பு சான்றிதழ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.