சாதிவாரி கணக்கெடுப்பு - பேரவையில் காரசார விவாதம்!
Nov 15, 2025, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு – பேரவையில் காரசார விவாதம்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 06:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் உரையாற்றிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியின் ஒரு அங்கம் எனவும், தெலங்கானாவில் கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் மாநில அரசுக்கு தடையில்லை என்பது தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டினார். படிப்பு, வேலை வாய்ப்பில் சாதி பார்க்கும் போது சாதியை எப்படி ஒழிக்க முடியும்? எனவும் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளதாக கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறினார். முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் எனவும், பின்னர் நீதிமன்றம் தடை விதித்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பணி எனக் குறிப்பிட்டார். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

மீண்டும் உரையாற்றிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் கேள்வி வந்தால் என்ன செய்வது? என வினவினார். அதற்காகவாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: Minister Meiyanathanvelmurugan mlatn Legislative AssemblyPMK MLA G.K. Manicaste-based census. debate
ShareTweetSendShare
Previous Post

ஜாகிர் உசேன் கொலை வழக்கு – தலைமறைவான பெண்ணை பிடிக்க கேரளா விரைந்த தனிப்படை!

Next Post

இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா? – சீமான் கேள்வி!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies