மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் விவரம் குறித்து மோகன் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாகவும், 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 2021-ம் ஆண்டில் 183 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதும், குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குழந்தை திருமணத்தைத் தடுக்க மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.